Wednesday, August 18, 2010

பூதமாய் மோதும் கனவு!

சாலைகளின் மேடுபள்ளங்களினூடே
காலணி துளைத்த கற்கால ஆயுதமாய்
கவிதை பகிர்வு!

அதன் உயரங்களில்
கிழித்த காற்றின் கழிவுகளை
விரித்த சிறகின் அழகிற்குள் சிறையிட்ட
பருந்தின் உயரப் பார்வைக்குள்
கற்காத கலைகளின் புரிதல்!

அதை ஓங்கியுடைத்த
அதிர்வுகளின் வியாக்கியான புனைவிற்குள்
பூதமாய் மோதும் கனவு!

1 comment:

  1. நல்ல தொடக்கம் தொடருங்கள் அமீன் ....

    ReplyDelete