Monday, January 24, 2011

இன்னுமிருக்கிறோம்..!

இலைகளின் இடுக்குகளில்
ஆவியாகும் வெப்பமாய்
கனவு!

நெளிந்து நழுவும்
மலை முகட்டுப் பாம்பாய்
காதல்!

இதோ...
உள்ளீடற்ற உருவமொன்றின்
உறுமல்கள் மறுசுழற்சி
செய்கிறது- கவிதையாய்!..

இன்னுமிருக்கிறோம்..
நானும் என் தனிமையும்...!!!!

நன்றி,
கீற்று.http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12595:2011-01-24-09-17-25&catid=2:poems&Itemid=265

Sunday, January 23, 2011

வலியொன்று..!

இலக்கியத்தில் இறங்காதே..
இறங்கினால்
இறக்கும் வரை உறங்காதே!
அவ்வப்போது
எழுகிறது..
மொழியென்றும் பழியென்றும்
சொல்ல இயலா வலியொன்று!...
*மணவை அமீன்*
நன்றி,
திண்ணை.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311012315&format=html