இலைகளின் இடுக்குகளில்
ஆவியாகும் வெப்பமாய்
கனவு!
நெளிந்து நழுவும்
மலை முகட்டுப் பாம்பாய்
காதல்!
இதோ...
உள்ளீடற்ற உருவமொன்றின்
உறுமல்கள் மறுசுழற்சி
செய்கிறது- கவிதையாய்!..
இன்னுமிருக்கிறோம்..
நானும் என் தனிமையும்...!!!!
நன்றி,
கீற்று.http://www.keetru.com/index.php?
No comments:
Post a Comment