Monday, May 17, 2010

காதலன்!



எனைப் புரியாப் புதிரே!
எனை அறியா மனமே!

ஆர்ப்பரித்தெழும் ஆழியலைகளாய்
கூர்மையான கனவுகளின்
காதலன் - நான்!
அதி பயங்கரமாய் முழங்குகின்ற
மதி வண்ணமான லட்சியங்களின்
காதலன் - நான்!
இடைவிடாது பொழிகின்ற
அடைமழையான கவிதைகளின்
காதலன் - நான்!
வாள்முனையைக் காட்டிலும்
கூர்முனையான பேனாவின்
காதலன் - நான்!

ஈர விறகே!

எனைப் பார்த்து
மகிழ்ந்தாலும்...நெகிழ்ந்தாலும்
இவற்றுக்கு மட்டுமே
காதலன்...! உனக்கல்ல!!!


1 comment: