Monday, May 17, 2010

விடை தேடிப் புறப்படு!

வாழ்க்கை எனும் போரில்
வாள் வீசத் தெரியாமல்
வாடிப்போன மனிதா!
வரையறைகளை வகுத்து
வல்லவனாய் ஆகிவிடு!

இலட்சிய விழிப்போடு
இலக்கை அடையத் தெரியாமல்
இருண்டு போன மனிதா!
இன்னல்களை உடைத்து
இமயமாய் உயர்ந்திடு!

கடமை எனும் கடலில்
கப்பல் ஓட்டத் தெரியாமல்
கவிழ்ந்து போன மனிதா!
கவலைகளைத் துறந்து
கரையை கண்டுவிடு!

விடியல் அறியாக் காட்டில்
விளக்கேற்றத் தெரியாமல்
விழுந்து விட்ட மனிதா!
விசும்பல்களை மறந்து
விடை தேடிப் புறப்படு!

No comments:

Post a Comment