Tuesday, May 18, 2010

இளைஞனே!



வறுமை கண்டு பயந்தவனும்
மழை தரா மேகமும் -ஒன்று!

தோல்வி கண்டு துவண்டவனும்
சிறகு இழந்த பறவையும் -ஒன்று !

இருள் கண்டு நடுங்கியவனும்
பிராண வாயுவில்லாக் காற்றும்-ஒன்று !

இன்னல் கண்டு தடுமாறியவனும்
சுழற்சியற்ற புவிக்கோளமும்-ஒன்று!

எதிரி கண்டு தடம் புரள்பவனும்
குருதி அருந்தா வாளும்-ஒன்று!

வெற்றி இல்லாது பயணிப்பவனும்
ஒளியில்லாப் பகல் பிறையும்-ஒன்று!

தன்னம்பிக்கை இல்லாது வீழ்பவனும்
உயிர் இல்லாத உடம்பும்-ஒன்று!

இலட்சியம் இல்லாது வாழ்பவனும்
இலக்கியம் இல்லாத மொழியும்-ஒன்று!

சாதனை செய்யா இளவட்டமும்
சரித்திரம் காணா நாடும்-ஒன்று!

No comments:

Post a Comment