Thursday, May 20, 2010

நானொன்றும் பைத்தியமல்ல!





மடந்தையே! என் காதல்
கடந்தையே! உன் நினைவுகளென்
உடந்தையே!

இசையே! எனை ஒட்டிய
பசையே! வாழ்வின் பெரும்
நசையே!

மங்கையே! நில்லாதோடும்
கங்கையே! நீதானடி
நங்கையே!

நறையே! என்னிதயத்தின்
கறையே! உயிரின்
உறையே!

ரதியே! பாய்ந்தோடும்
நதியே! நான் ரசிக்கும்
மதியே!

ஒளியே! எந்தன் இரு
விழியே! காதல் தீவின்
வழியே!

சிலையே! என்னில் அடித்திட்ட
அலையே! மனம் விரும்பும்
கலையே!

காற்றே! பொங்கி வரும்
ஊற்றே! சுடர் விடும் ஒளிக்
கீற்றே!

மானே! நான் பருகும்
தேனே! சுதந்திரப் பறவையின்
வானே!

ஒரு முத்தம்
போதுமென்று சொல்ல
நானொன்றும் பைத்தியமல்ல..!

முத்தத்தை மொத்தமாய்
குத்தகைக்கு எடுத்த
காதலன்- ஆயுளின் அந்தி வரை!


No comments:

Post a Comment