Monday, May 17, 2010

மௌன மூச்சு ...!



தருணங்கள் தேடி வருவதில்லை...
மரணமும் இப்படியே!
நம்மில் இடைவெளி உருவாகும்போது
காலத்தின் இடைவேளை உருகும்
ஒரு நாளாவது!

நேச அம்புகள் எய்த பின்னர்
நேற்றைய நினைவுகள் கலைந்திடுமா?
சுவாச மூச்சு தொடரும் வரை
நாளைய உறவு பலப்படுமா?
'புரிதல்' வாழ்க்கை புலர்தலின் பாதை
வேண்டுமென வேண்டும்...
வேண்டாமென தீண்டும்...
மூச்சுக் காற்று உறையும்...
முனங்கி முனங்கிக் கரையும்
புரிதலற்ற வாழ்க்கை
உலர்ந்திட்ட பூவாய்...!
மனதில் என்ன மௌனம்...
வார்த்தை இறந்த போகும்.
அனுதினமும் அனுபவம்...
அன்பும்...அழுகையும்...
அருகில் அமர்ந்த அரவணைப்பு
ஆற்றாமையின் அசல் அவதாரமாய்!
வார்த்தைகள் வசப்படாமல்
வாழ்க்கையை வசியமாக்கி
வெல்லவியலா...
மௌன மூச்சு மரணத்தின்
மலர்க்கொடி!

No comments:

Post a Comment